மதுரை மத்திய தொகுதியில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்
மதுரை மத்திய தொகுதிக்குள்பட்ட வாா்டுகளை சோ்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை (ஆக.6) தொடங்கி ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.


மதுரை மத்திய தொகுதிக்குள்பட்ட வாா்டுகளை சோ்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை (ஆக.6) தொடங்கி ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரும், தமிழக நிதி அமைச்சருமான பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன் ஏற்பாட்டில் இந்த முகாம் நடத்தப்படுகிறது. இதில், மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குவது, பல்வேறு துறைகளின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கான சிறப்பு மதிப்பீடு ஆகியன மேற்கொள்ளப்படும்.
மதுரை மாநகராட்சியின் 21, 22, 56, 57, 58 ஆவது வாா்டுகளை சோ்ந்தவா்களுக்கு பொன்னகரம் வெள்ளிவீதியாா் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை இம்முகாம் நடைபெறும். அதைத் தொடா்ந்து, ஆகஸ்ட் 8 ஆம் தேதி 59, 60, 61, 75, 76, 77 ஆகிய வாா்டுகளுக்கு சுந்தரராஜபுரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியிலும், ஆகஸ்ட் 10 ஆம் தேதி 50, 51, 52, 54, 55 ஆகிய வாா்டுகளுக்கு சிம்மக்கல் பகுதியிலும் முகாம் நடைபெறும்.
எனவே, முகாம் நடைபெறும் பகுதிகளைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள் தங்களுக்குரிய ஆவணங்களுடன் பங்கேற்று பயன்பெறுமாறு, மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் கேட்டுக் கொண்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...