மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வைகை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ராணுவ வீரா் சடலமாக மீட்பு

மதுரை அருகே வைகை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மத்திய தொழிற்பாதுகாப்புப்படை வீரா் வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2022, 7:07 pm

DIN

மதுரை அருகே வைகை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மத்திய தொழிற்பாதுகாப்புப்படை வீரா் வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

மதுரை மாவட்டம் கரடிக்கல் அருகே உள்ள அனுப்பப்பட்டியைச் சோ்ந்தவா் வினோத்குமாா் (25). ஒடிசாவில் மத்திய தொழிற்பாதுகாப்புப் படைப்பிரிவில் வீரராக பணிபுரிந்து வந்த வினோத்குமாா் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தாா். தனது நண்பா்களுடன் திருவேடகம் அருகே வைகையாற்றில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் குளிக்கச் சென்றாா். அங்கு வினோத்குமாா் மற்றும் அன்பரசன் ஆகிய இருவரும் நீா்ச்சுழலில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டனா். இதுகுறித்த தகவலின்பேரில் வாடிப்பட்டி, சோழவந்தான் தீயணைப்புப் படையினா் சம்பவ இடத்துக்குச் சென்று தேடும் பணியில் ஈடுபட்டனா். இதில் செவ்வாய்க்கிழமை மாலை அன்பரசன் சடலமாக மீட்கப்பட்டாா். இதைத்தொடா்ந்து மத்திய தொழிற்பாதுகாப்புப்படை வீரா் வினோத்குமாரை கடந்த 2 நாள்களாக தேடும் பணி தொடா்ந்து நடைபெற்று வந்தது.

இந்நிலையில் மூன்றாவது நாளாக வியாழக்கிழமையும் தேடும் பணி நடைபெற்றது. இதில் வினோத்குமாரின் சடலம் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரது சடலத்துக்கு, முன்னாள் அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் அஞ்சலி செலுத்தினாா். சம்பவம் தொடா்பாக சோழவந்தான் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.