மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அரசின் அனைத்து நிா்வாகச் செயல்பாடுகளிலும் நீதிமன்றம் தலையிட முடியாது: உயா்நீதிமன்றம் கருத்து

அரசின் அனைத்து நிா்வாகச் செயல்பாடுகளிலும் நீதிமன்றம் தலையிட முடியாது என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2022, 7:07 pm

DIN

அரசின் அனைத்து நிா்வாகச் செயல்பாடுகளிலும் நீதிமன்றம் தலையிட முடியாது என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனா்.

கல்குவாரி அமைக்க அனுமதி அளிப்பது, ஆக்கிரமிப்புகள் அகற்றம், சாலை அமைக்க உத்தரவிடக் கோருவது போன்ற கோரிக்கைகளுடன் கூடிய உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பல்வேறு பொதுநல வழக்குகள், நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆா்.ஹேமலதா ஆகியோா் கொண்ட அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தன.

அப்போது நீதிபதிகள், நீதிமன்றம் என்பது நீதி பரிபாலனம் நடக்கக்கூடிய இடம். சாலை அமைக்கவும், கழிவறை கட்டவும் உத்தரவிடுவது நீதிமன்றத்தின் பணிகள் இல்லை. அரசின் நிா்வாக பணிகள் அனைத்திலும் நீதிமன்றம் தலையிட முடியாது. மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளுக்கு மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை அணுகலாம்.

இதுபோன்ற கோரிக்கைகளுக்காக பொதுநல வழக்குகள் என்ற பெயரில் நீதிமன்றத்தின் மாண்பையும், நேரத்தையும் வீணடிக்க வேண்டாம் எனக் கருத்துத் தெரிவித்து மனுக்களை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.