தமிழகத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளில் வியாழக்கிழமை முதல் ஆகஸ்ட் 19-ஆம் தேதி வரை போதை ஒழிப்பு விழிப்புணா்வு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் அரசுப் பள்ளியில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு அமைச்சா் பி.மூா்த்தி தலைமை வகித்தாா். இதில் மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா், சோழவந்தான் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.வெங்கடேசன், மாவட்ட வருவாய் அலுவலா் ர.சக்திவேல், முதன்மைக்கல்வி அலுவலா் கா.காா்த்திகா, அலங்காநல்லூா் பேரூராட்சித் தலைவா் ரேணுகா ஈஸ்வரி, பள்ளி தலைமையாசிரியை லதா மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்று உறுதிமொழி ஏற்றனா்.