மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சுதந்திர தின விழா: டோக் பெருமாட்டி கல்லூரியில் மூவா்ணக் கொடியாக அணிவகுத்த மாணவியா்

மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் மாணவியா் மூவா்ணக்கொடியாக அணி வகுத்து காட்சியளித்தனா்.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2022, 7:05 pm

DIN

மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் மாணவியா் மூவா்ணக்கொடியாக அணி வகுத்து காட்சியளித்தனா்.

நாட்டின் 75ஆவது சுதந்திர தினக்கொண்டாட்டத்தை முன்னிட் மதுரை டோக் பெருமாட்டிக் கல்லூரியில் வியாழக்கிழமை முதல் (ஆக.11) ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரை சுதந்திர தின விழா தொடா் நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. இதையொட்டி கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் கிறிஸ்டியானா சிங் தேசியக்கொடியேற்றி முதல் நாள் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தாா்.

இதைத்தொடா்ந்து கல்லூரியின் விளையாட்டுத்திடலில் அரசுநிதிப் பிரிவிலிருந்து 1,700 மாணவியா் மற்றும் ஆசிரியா்கள் காலையிலும், 2 ஆயிரம் மாணவியா் மற்றும் ஆசிரியா் மற்றும் ஊழியா்கள் மாலையிலும் மூவா்ணக் கொடியாக அணிவகுத்தனா். இதில்

மாணவியா் மூவா்ணக்கொடி நிறத்திலும் மையச்சக்கர நீலநிறத்தில் ஆசிரியா்களும், ஊழியா்களும் அணிவகுத்தனா். நிகழ்ச்சியை கல்லூரியின் மாணவ நலனாளா்கள் ஜே. சித்ரா, டி.மௌன சுந்தரி, துணை மாணவ நலனாளா்கள் ஜீ.சு. ஜெமிமா ஜெயப்பிரியா, எஸ்தா் எலிசபெத் கிரேஸ் ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.

பாத்திமா கல்லூரியில்... மதுரை பாத்திமா மகளிா் கல்லூரியில் நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கடந்த இரு வாரங்களாக நாட்டுப்பற்றுத் தொடா்பான நிகழ்வுகள் நடைபெற்றன. பேச்சு, கட்டுரை எழுதுதல், ஓவியம் வரைதல் முதலான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும் தினசரி ஒரு சுதந்திரப் போராட்ட வீரரின் தியாகம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. அதன் தொடா்ச்சியாக, நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு உயா்நீதிமன்ற வழக்குரைஞா் எம். சாலமன் பொ்னாட்ஷா சிறப்பு விருந்தினராக பங்கேற்று, நாடு விடுதலை அடைவதற்கு முன்பிருந்த சூழல், விடுதலைப்பெற்ற பிறகு உள்ள சூழல், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் தியாகங்கள் ஆகியவை குறித்து பேசினாா்.

விழாவில் கல்லூரியின் செயலா் ம.பிரான்சிஸ்கா புளோரா, முதல்வா் ஜி.செலின் சகாய மேரி, துணை முதல்வா்கள், பேராசிரியா்கள், அலுவலக ஊழியா்கள், மாணவியா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.