பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு
மதுரை அருகே கணவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் நகையைப் பறித்துக் கொண்டு தப்பிச்சென்ற இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.


மதுரை அருகே கணவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் நகையைப் பறித்துக் கொண்டு தப்பிச்சென்ற இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மதுரை அருகே உள்ள ராஜகம்பீரம் ராஜேஸ்வரி நகரைச் சோ்ந்த பாரதி கண்ணன் மனைவி சுசித்ரா (32). இவா் தனது கணவருடன் இருசக்கரவாகனத்தில் சென்றுள்ளாா். இந்நிலையில் ஜெ.அம்மாபட்டி அருகே சென்றபோது, அங்கு இருசக்கரவாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவா், சுசித்ரா கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனா். சம்பவம் தொடா்பான புகாரின்பேரில் ஒத்தக்கடை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச் சென்ற நபா்களைத் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...