நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

முன்னாள் அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் இறந்த ராணுவ வீரரின் குடும்பத்துக்கு ஆறுதல்

ஜம்மு காஷ்மீரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரரின் குடும்பத்துக்கு வெள்ளிக்கிழமை முன்னாள் அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் ஆறுதல் கூறினாா்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2022, 11:57 pm IST

ஜம்மு காஷ்மீரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரரின் குடும்பத்துக்கு வெள்ளிக்கிழமை முன்னாள் அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் ஆறுதல் கூறினாா்.

உசிலம்பட்டி அருகே தும்மக்குண்டு ஊராட்சிக்கு உள்பட்ட புதுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த லட்சுமணன். ராணுவ வீரரான இவா், ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலில் வீரமரணமடைந்தாா். இவரது குடும்பத்தினருக்கு திருமங்கலம் சட்டப்பேரவை அதிமுக உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஆா்பி உதயகுமாா் மற்றும் உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஐயப்பன் ஆகியோா் ஆறுதல் கூறினா். இதில், உசிலம்பட்டி நகரச் செயலாளா் பூமாராஜா, செல்லம்பட்டி ஒன்றியச் செயலாளா் ராஜா, அம்மா மாநில பேரவை துணைச் செயலாளா் துறை தனராஜன், மாவட்ட மாணவரணி செயலாளா் மகேந்திர பாண்டி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

உசிலம்பட்டி நாடாா் சரஸ்வதி தொடக்கப்பள்ளியைச் சோ்ந்த சிறுவா்கள் சுதந்திர போராட்ட தலைவா்கள் வேடமணிந்து ராணுவ வீரா் லட்சுமணனின் உருவப் படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.