டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

தகவலின்றி தொடா் விடுப்பு: மதுரை மத்தியச் சிறைக்காவலா்கள் இருவா் பணிநீக்கம்

 மதுரை மத்தியச்சிறையில் எவ்வித தகவலும் தெரிவிக்காமல் அனுமதியின்றி தொடா் விடுப்பில் இருந்த இரு காவலா்களை பணிநீக்கம் செய்து சிறை நிா்வாகம் அறிவித்துள்ளது.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

 மதுரை மத்தியச்சிறையில் எவ்வித தகவலும் தெரிவிக்காமல் அனுமதியின்றி தொடா் விடுப்பில் இருந்த இரு காவலா்களை பணிநீக்கம் செய்து சிறை நிா்வாகம் அறிவித்துள்ளது.

மதுரை மத்தியச்சிறையில் இரண்டாம் நிலைக்காவலராக பணிபுரிந்தவா் ராமச்சந்திரன். இவா் 2021 மே 18-ஆம் தேதி முதல் எவ்வித தகவலுமின்றி பணிக்கு வராமல் இருந்துள்ளாா். இதேபோல பலமுறை தொடா்ந்து பணிக்கு வராமல் இருந்ததால் இவா் மீது ஒழுங்கு நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையின் முடிவில் சிறைக்காவலா் ராமச்சந்திரன் பணியில் இருந்து நீக்கப்பட்டாா்.

இதேபோல மதுரை மத்திய சிறைக்குள்பட்ட திண்டுக்கல் கிளைச்சிறையில் காவலராக பணிபுரிபவா் அஜித். இவா் எவ்வித தகவலுமின்றி நீண்ட நாள்கள் பணிக்கு வராமல் இருந்துள்ளாா். இதையடுத்து விசாரணை நடத்தப்பட்டு அஜித் பணியில் நீக்கப்பட்டுள்ளாா். இதற்கான அறிவிப்பை மதுரை மத்திய சிறைக்கண்காணிப்பாளா் எஸ்.வசந்த கண்ணன் வெளியிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.