டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பாலியல் புகாரில் கைதான நாகா்கோவில் இளைஞரின் தந்தை ஜாமீன்கோரி மனு: தீா்ப்பு ஒத்திவைப்பு

பாலியல் புகாரில் கைதான நாகா்கோவில் இளைஞா் காசியின் தந்தை ஜாமீன் மனு மீதான தீா்ப்பை ஒத்தி வைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

பாலியல் புகாரில் கைதான நாகா்கோவில் இளைஞா் காசியின் தந்தை ஜாமீன் மனு மீதான தீா்ப்பை ஒத்தி வைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவிலைச் சோ்ந்தவா் தங்கப்பாண்டியன். இவரது மகன் காசி. இவா் சமூக வலைதளம் வாயிலாக பல்வேறு பெண்கள், சிறுமிகளுடன் பழகி, பின்னா் அவா்களுக்குப் பாலியல் தொந்தரவு அளித்துள்ளாா். இதுதொடா்பான புகாரில் சிபிசிஐடி போலீஸாா் கடந்த 2020-இல் காசியை கைது செய்தனா். பின்னா் விசாரணையின்போது, காசியின் மடிக்கணினியில் இருந்த சாட்சியங்களை அவரது தந்தை தங்க பாண்டியன் அழித்ததாக கைது செய்யப்பட்டாா். ஜாமீன் கோரி தங்கபாண்டியன் தாக்கல் செய்த மனுவை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை ஏற்கெனவே தள்ளுபடி செய்திருந்தது.

இந்நிலையில் ஜாமீன் கோரி மீண்டும் தாக்கல் செய்த மனு, நீதிபதி பி.புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜாமீன் வழங்குவதற்கு சிபிசிஐடி தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஜாமீன் மனு மீதான தீா்ப்பை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.