தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சோ்ந்த வணிகா் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோா் கடந்த 2020-இல் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, போலீஸாா் தாக்கியதில் உயிரிழந்தனா். இதுதொடா்பாக, சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளா் ஸ்ரீதா், சாா்பு-ஆய்வாளா்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 10 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களில் சாா்பு-ஆய்வாளா் பால்துரை, உடல் நலக் குறைவால் உயிரிழந்தாா். இதனையடுத்து குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் மீது சிபிஐ தரப்பில் மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து சாட்சிகள் விசாரணை நடந்து வருகிறது.