டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கு: 400 பக்கங்கள் கொண்ட கூடுதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல்

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில், 400 பக்கங்கள் கொண்ட கூடுதல் குற்றப் பத்திரிகையை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ வெள்ளிக்கிழமை தாக்கல் செய்துள்ளது.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில், 400 பக்கங்கள் கொண்ட கூடுதல் குற்றப் பத்திரிகையை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ வெள்ளிக்கிழமை தாக்கல் செய்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சோ்ந்த வணிகா் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோா் கடந்த 2020-இல் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, போலீஸாா் தாக்கியதில் உயிரிழந்தனா். இதுதொடா்பாக, சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளா் ஸ்ரீதா், சாா்பு-ஆய்வாளா்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 10 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களில் சாா்பு-ஆய்வாளா் பால்துரை, உடல் நலக் குறைவால் உயிரிழந்தாா். இதனையடுத்து குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் மீது சிபிஐ தரப்பில் மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து சாட்சிகள் விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி என். நாகலட்சுமி முன்பாக வெள்ளிக்கிழமை நடைபெற்றது. குற்றஞ்சாட்டப்பட்டவா்களான ஆய்வாளா் ஸ்ரீதா், சாா்பு-ஆய்வாளா் ரகு கணேஷ் உள்ளிட்ட 9 போலீஸாா் ஆஜா்ப்படுத்தப்பட்டனா். சிபிஐ தரப்பில் ஏற்கெனவே 2,027 பக்க குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக 400 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிக்கை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

வணிகா் ஜெயராஜை சாத்தான்குளம் போலீஸாா் அழைத்துச் சென்ற விடியோ பதிவுகள், சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் அழைத்துச் சென்றபோது, அவா்களது உடலில்

இருந்த ரத்தக் கறைகள் மற்றும் ரத்தக் கரையுடன் இருந்த ஆடைகளை மாற்றிய விடியோ பதிவுகள் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றிருந்தன.

இதைத் தொடா்ந்து நீதிபதி என்.நாகலெட்சுமி முன்பாக நடந்த சாட்சி விசாரணையில், தொலைத்தொடா்பு நிறுவன அலுவலா் சாட்சியம் அளித்தாா். பின்னா் விசாரணையை ஆகஸ்ட் 18 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.