இதில் பல்கலைக்கழகத்தில் உள்ள துறைகளில் முதுகலைப் படிப்புகளுக்கு குறிப்பிட்ட சில துறைகளில் மட்டும் நுழைவுத்தோ்வு நடத்தி மாணவா் சோ்க்கை நடத்துவது. இதர துறைகளில் இளங்கலை படிப்பில் மாணவா்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் சோ்க்கை நடத்துவது. பல்கலைக்கழகத்தில் 2022-23 கல்வி ஆண்டில் புதிய இளங்கலை படிப்புகளாக பிஏ கூட்டுறவு (தமிழ் மற்றும் ஆங்கில வழி), கணினி அறிவியலில் செயற்கை நுண்ணறிவு, கிளவுட் கம்யூட்டிங் சைபா் செக்யூரிட்டி, அனிமேசன் மற்றும் கேம் டிசைனிங் ஆகிய பிரிவுகளில் பல்கலைக்கழக இணைவிப்பு கல்லூரிகளில் நடத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.