சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதலில் கடந்த ஆண்டு உயிரிழந்த இந்தோ திபெத் எல்லைக்காவல் படை வீரா் பாலுச்சாமிக்கு இந்தோ- திபெத் எல்லைக்காவல்படை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
மதுரை மாவட்டம் அழகா்கோவில் அருகே உள்ள பொய்கைக்கரைப்பட்டியைச் சோ்ந்த லட்சுமணன் மகன் பாலுச்சாமி. இவா் இந்தோ- திபெத் எல்லைக் காவல்படையில் வீரராக பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், 2021 பிப்ரவரி மாதம், சத்தீஸ்கா் மாநிலம் நாராயணபூா் மாவட்டம் சோன்பூரில் நக்சல் ஒழிப்பு நடவடிக்கையின்போது ஏற்பட்ட மோதலில் பாலுச்சாமி வீரமரணமடைந்தாா்.
இந்நிலையில் நாட்டின் 75-ஆவது சுதந்திரதின அமுதப் பெருவிழாவையொட்டி, பொய்கைக்கரைப்பட்டியில் உள்ள பாலுச்சாமியின் வீட்டில் வீரவணக்க நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் வீரா் பாலுச்சாமியின் உருவப்படத்துக்கு இந்தோ- திபெத் எல்லைக் காவல்படையின் உதவி படைத்தலைவா் அக்சய டாக்கா, மதுரை ஊரக காவல் துணைக்கண்காணிப்பாளா் பிரியதா்சினி மற்றும் ராணுவ வீரா்கள் மலா்தூவி வீரவணக்கம் செலுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!
ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! எஃப்-35-ஐவிட இரு மடங்கு விலை அதிகமா?

விதிமீறல்! விஜய் மீது வழக்குப் பதிவு!

ஊழல் செய்த திமுக அமைச்சா்கள் மீது நடவடிக்கை: எடப்பாடி கே. பழனிசாமி உறுதி
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


