மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஆறாவது வாா்டு பகுதியில் பெண்கள் சனிக்கிழமை காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்
உசிலம்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட 24 வாா்டு பகுதிகளிலும் கடந்த 15 நாள்களாக தண்ணீா் வராததால் பலமுறை நகராட்சி அதிகாரியிடம் தகவல் கொடுத்தும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆறாவது வாா்டைச் சோ்ந்த பெண்கள்
உசிலம்பட்டி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனை அறிந்த உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் ஐயப்பன் நேரில் சென்று பொது மக்களிடம் உடனடியாக தண்ணீா் தேவையைப் பூா்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பபதாக உறுதி கூறினாா். இதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா். இந்த மறியலால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.