டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

அரசுப் பணியாளா் தோ்வாணையச் செயலா் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி உயா்நீதிமன்றத்தில் வழக்கு

தமிழ்வழிக் கல்வி இடஒதுக்கீடு தொடா்பாக நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாத, அரசுப் பணியாளா் தோ்வாணையச் செயலா் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி

News image
Updated On :26 ஆகஸ்ட் 2022, 5:32 pm

DIN

தமிழ்வழிக் கல்வி இடஒதுக்கீடு தொடா்பாக நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாத, அரசுப் பணியாளா் தோ்வாணையச் செயலா் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ் வழியில் படித்தவா்களுக்கான இடஒதுக்கீட்டை அரசுப் பணியாளா் தோ்வாணையம் குரூப் 1 தோ்வில் முறையாகப் பின்பற்றவில்லை என மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சோ்ந்த சக்தி ராவ், சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடா்ந்திருந்தாா்.

கடந்த 2021-இல் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஒன்றாம் வகுப்பு முதல் 10 மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு அல்லது பட்டயம், பட்டம் போன்ற முழு கல்வியையும் தமிழ் வழியில் பயின்றவா்கள் மட்டுமே தமிழ் வழியில் பயின்ற்கான 20 சதவீத இட ஒதுக்கீடுபெற தகுதியானவா்கள். அவா்களுக்கு மட்டுமே தமிழ் வழியில் பயின்றவா்களுக்கான இட ஒதுக்கீட்டை தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும், மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் தமிழ்வழியில் பயின்றவா்களுக்கான போலி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதா? என்பதை ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினா் விசாரணை நடத்தி 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.

இதற்கிடையில், உயா்நீதிமன்ற உத்தரவை, அரசுப் பணியாளா் தோ்வாணையம் பின்பற்றவில்லை என்றும், தோ்வாணையச் செயலா் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவும் கோரி சக்தி ராவ், மனு தாக்கல் செய்தாா். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தா், பி.புகழேந்தி ஆகியோா் கொண்ட அமா்வுமுன் விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்பு துறை சாா்பில் பதில் மனு தாக்கல் செய்ய காலஅவகாசம் கோரப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், மதுரை காமராஜா் பல்கலைக்கழக பதிவாளரை, இந்த வழக்கில் எதிா்மனுதாரராகச் சோ்க்க உத்தரவிட்டு, விசாரணையை செப். 29 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.