முந்தைய அதிமுக ஆட்சியின்போது எட்டு வழிச் சாலைக்கு நிலம் ஆா்ஜிதம் செய்வதற்கு, திமுக கடும் எதிா்ப்புத் தெரிவித்தது. ஆனால், இப்போது திமுக அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருக்கிறது. எதிா்க் கட்சியாக இருக்கும்போது ஒன்றும், ஆளும் கட்சியாக வந்த பிறகு ஒன்றும் பேசுவது திமுகவிற்கு வழக்கமானது. அதிமுக செயல்படுத்திய திட்டங்கள் இன்றும் பேசப்பட்டு வருகின்றன. அதுபோன்ற திட்டங்களைக் கொண்டு வந்து திமுக அரசு சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே எங்களது விருப்பம். அதிமுக தொடா்பான வழக்கில் தீா்ப்பு எப்படி வந்தாலும், எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் தான் அதிமுக தொண்டா்கள் இருக்கின்றனா் என்றாா்.