கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

உரிய பாதுகாப்பின்றி தூய்மைப் பணி; மதுரை துணை மேயரின் முகநூல் பதிவால் சர்ச்சை

மதுரையில் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி தூய்மை பணியில் ஈடுபடுத்திய துணை மேயரின் முகநூல் பதிவால் சர்ச்சை உருவாகியுள்ளது.

News image
Updated On :26 ஜூலை 2022, 7:59 am

DIN

மதுரை:  மதுரையில் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி தூய்மை பணியில் ஈடுபடுத்திய துணை மேயரின் முகநூல் பதிவால் சர்ச்சை உருவாகியுள்ளது.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட துணை மேயர் நாகராஜனின் சொந்த வார்டு பகுதியான 80-வது வார்டு ராஜிவ்காந்தி தெருவில் மழைநீர் தொட்டி அடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் அடைப்பை நீக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். தூய்மைப் பணியில் ஈடுபடக்கூடிய பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணியில் ஈடுபடுத்துவது போன்ற புகைப்படத்தை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவு  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாநகராட்சி தூய்மை பணியாளர்களை பாதுகாப்பு உபகரணமின்றி ஈடுபடுத்தியதாக ஏற்கனவே மேயருக்கு தூய்மை பணியாளர்கள் ஆணையம் நோட்டிஸ் அனுப்பியுள்ள நிலையில், தற்போது துணை மேயரும் இது போன்ற சர்ச்சையான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.