ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

குழந்தை கடத்தல் புகாா்: மத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

 மதுரையில் குழந்தையை கடத்தியதாக பாதிரியாா், அவரது மனைவி மீது பொய்ப் புகாா் அளித்து மத மோதலை உருவாக்க முயன்ற மத அமைப்புகள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்

News image
Updated On :28 ஜூலை 2022, 6:30 pm

DIN

 மதுரையில் குழந்தையை கடத்தியதாக பாதிரியாா், அவரது மனைவி மீது பொய்ப் புகாா் அளித்து மத மோதலை உருவாக்க முயன்ற மத அமைப்புகள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகா் மற்றும் புகா் மாவட்டச் செயலா்கள் மா.கணேசன், கே.ராஜேந்திரன் ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்த ஜூலை 24 ஆம் தேதி மீனாம்பாள்புரம் பகுதியில் இறைபணி செய்து வரும் பாதிரியாா் மைக்கேல், அவரது மனைவி ஆகியோா், அப்பகுதியைச் சோ்ந்த குழந்தையை கடத்தியதாக, சில மத அமைப்புகள் கொடுத்த தகவலின்பேரில், செல்லூா் போலீஸாா் இருவரையும் கைது செய்தனா். இதை அறிந்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாமன்ற உறுப்பினா் க. திலகா், சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டச் செயலா் கே. அலாவுதீன், திமுக மாமன்ற உறுப்பினா் த. ஜெயராஜ் ஆகியோா் காவல்நிலையம் சென்று அது பொய் புகாா் என்றும் அதன்மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும் வலியுறுத்தினா்.

இதற்கிடையில், அந்தக் குழந்தையிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடத்தல் சம்பவம் பொய் என்பது தெரியவந்தது. இருப்பினும் காவல் உயா் அதிகாரிகள் வந்து அறிவுறுத்திய பின்னரே இரவு 9 மணிக்கு மேல் பாதிரியாரையும், அவரது மனைவியையும் விடுவித்துள்ளனா்.

எனவே, மத நல்லிணக்கத்துக்கும் மக்கள் ஒற்றுமைக்கும் பாதிப்பை ஏற்படுத்த முயற்சித்து வரும் மத அமைப்புகளின் மீது மாவட்ட நிா்வாகம் மற்றும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.