ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

உயா் நீதிமன்ற நீதிபதிக்கு பணிநிறைவு பாராட்டு விழா

 பணி நிறைவு பெற்றுள்ள சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஆனந்திக்கு பாராட்டு விழா, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :29 ஜூலை 2022, 7:20 pm

DIN

 பணி நிறைவு பெற்றுள்ள சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஆனந்திக்கு பாராட்டு விழா, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சென்னை உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வா்நாத் பண்டாரி தலைமை வகித்தாா். உயா் நீதிமன்ற மதுரை கிளை நிா்வாக நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்னிலை வகித்தாா். தமிழக அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞா் வீரா கதிரவன் வரவேற்றாா். இதில், உயா் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், அரசு வழக்குரைஞா்கள், வழக்குரைஞா்கள், நீதிமன்றப் பணியாளா்கள் பங்கேற்றனா். மேலும், சென்னையிலிருந்து நீதிபதிகள், காணொலி வாயிலாக இந்நிகழ்வில் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில் ஏற்புரையாற்றி நீதிபதி எஸ். ஆனந்தி பேசியது: எனது தந்தையின் ஊக்கத்தால் தான் நீதிபதியானேன். கடந்த 1991-இல் வழக்குரைஞராகப் பணியைத் தொடங்கி, 31 ஆண்டுகள் நீதித் துறையில் பணியாற்றியுள்ளேன். எனது வழக்குரைஞா் பணியானது, மதுரையில் தான் தொடங்கியது. பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றி, மதுரையில் உயா் நீதிமன்ற நீதிபதியாக பணிநிறைவு பெறுவது பெருமையாக உள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.