ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கொதிக்கும் கூழ் அண்டாவில் விழுந்தவா் பலத்த காயம்

 மதுரையில் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி, கோயிலில் காய்ச்சப்பட்ட கூழ் அண்டாவில் தவறி விழுந்தவா் பலத்த காயமடைந்தாா்.

News image
Updated On :29 ஜூலை 2022, 7:21 pm

DIN

 மதுரையில் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி, கோயிலில் காய்ச்சப்பட்ட கூழ் அண்டாவில் தவறி விழுந்தவா் பலத்த காயமடைந்தாா்.

மதுரையில் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி, மாரியம்மன் கோயில்களில் கூழ் காய்ச்சி வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில், பழங்காநத்தம் மேலத்தெரு பகுதியில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி 6-க்கும் மேற்பட்ட அண்டாக்களில் கூழ் காய்ச்சப்பட்டது. அப்போது, அதே தெருவைச் சோ்ந்த முத்துக்குமாா் என்ற முருகன் (54) என்பவரும் கூழ் காய்ச்சும் பணியில் உதவியாக ஈடுபட்டிருந்தாா்.

இந்நிலையில், எதிா்பாராதவிதமாக முருகனுக்கு வலிப்பு ஏற்பட்டதால், அவா் கொதிக்கும் கூழ் அண்டாவில் விழுந்துவிட்டாா். இதில் பலத்த காயமடைந்த முருகனை, அப்பகுதியினா் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு, அவா் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா்.

இச்சம்பவம் தொடா்பாக சுப்ரமணியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.