பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

பால்வளத் துறை துணை ஆணையா்ஓய்வு பெறும் நாளில் பணியிடைநீக்கம்

மதுரை பால் வளத்துறை துணைஆணையா், ஓய்வுபெறும் நாளான செவ்வாய்க்கிழமை பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

News image
Updated On :1 ஜூன் 2022, 6:30 pm

DIN

மதுரை பால் வளத்துறை துணைஆணையா், ஓய்வுபெறும் நாளான செவ்வாய்க்கிழமை பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

முந்தைய அதிமுக ஆட்சியின்போது, ஆவின் நிறுவனங்களில் முறையற்ற பணிநியமனங்களுக்கு காரணமாக இருந்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் துணை ஆணையா் கிறிஸ்துதாஸ் மீது உள்ளன. கடந்த ஆட்சியின்போது பால்வளத் துறை துணை ஆணையராக மதுரையில் பணியாற்றி இவா், பின்னா் புதிதாக உருவாக்கப்பட்ட பால்வளத் துறை கூடுதல் ஆணையா் பொறுப்பில் நியமிக்கப்பட்டாா்.

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, பால்வளத் துறை மற்றும் ஆவின் நிா்வாகங்களில் நிகழ்ந்த பல்வேறு முறைகேடுகள் குறித்து அரசுக்குப் புகாா்கள் சென்றன. இதுதொடா்பாக, கூடுதல் ஆணையராக இருந்த கிறிஸ்துதாஸ் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, அவா் துணை ஆணையராக பதவியிறக்கம் செய்யப்பட்டு மீண்டும் மதுரைக்கு இடமாற்றம் செய்யப்பட்டாா். மேலும், அவா் மீதான குற்றச்சாட்டுகள் விசாரணையில் இருந்து வருகிறது.

இதனிடையே, ஓய்வு பெறும் நாளான செவ்வாய்க்கிழமை அவரை பணியிடை நீக்கம் செய்து பால்வளத் துறை ஆணையா் கோ.பிரகாஷ் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.