பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

கைதியின் தற்கொலை முயற்சிக்கு உடந்தையா?சிறைக் காவலா் பணியிடை நீக்கம்

கைதியின் தற்கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்ததாக, மதுரை மத்தியச் சிறைக் காவலா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா்.

News image
Updated On :1 ஜூன் 2022, 6:30 pm

DIN

கைதியின் தற்கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்ததாக, மதுரை மத்தியச் சிறைக் காவலா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா்.

விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா் முகமது உசேன் (29). இவா் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. மதுரை மாவட்டம் சமயநல்லூா் காவல் நிலைய போலீஸாரால் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட அவா், மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு உடலில் பிளேடால் கீறிக் கொண்டு முகமது உசேன் தற்கொலைக்கு முயன்றாா். அவரை சிறைக் காவலா்கள் மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து சிறை நிா்வாகம் விசாரணை நடத்தியது.

சிறையில் முகமது உசேன் அடைக்கப்பட்டிருந்த பிரிவில் பாதுகாப்புப் பணியில் இருந்தவா்களிடம் தனித்தனியே விசாரணை நடத்தப்பட்டது. அதில், முகமது உசேனுக்கு பிளேடு வழங்கியது சிறைக் காவலா் சின்னசாமி என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை பணியிடைநீக்கம் செய்து சிறைத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.