பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

அரிய வகை மரக்கன்றுகளைபராமரிக்கத் திட்டம்: ஆட்சியா்

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அரிய வகை மரக்கன்றுகளை பராமரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் தெரிவித்தாா்.

News image
Updated On :1 ஜூன் 2022, 6:30 pm

DIN

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அரிய வகை மரக்கன்றுகளை பராமரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் தெரிவித்தாா்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கையாக, ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி புதன்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு அரிய வகை மரக்கன்றுகளை ஆட்சியா் நடவு செய்தாா். பின்னா் அவா் கூறுகையில், மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செங்கருங்காலி, வில்வம், கோழிக்கொண்டை மரம், பிராய், அகா்வுட், பலாசு, புன்னை, நாகலிங்கம், திருவோடு, ரோஸ்வுட், கருங்காலி, ருத்ராட்சம், கொடம்புளி, ஆப்ரிக்கன் மகோகனி, விலாம், இலுப்பை, செண்பகம், மஞ்சள் புங்கை, வஞ்சி, வன்னி, ரெட்சேன்டல், ட்ரம்பட் மரம், மலை பூவரசு ஆகிய அரியவகை மரக்கன்றுகளை நட்டுப் பராமரித்திட திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.