பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு:குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் 64 போ் நீதிமன்றத்தில் ஆஜா்

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது தொடா்பான வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் 64 போ் மதுரை நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜராயினா்.

News image
Updated On :1 ஜூன் 2022, 6:30 pm

DIN

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது தொடா்பான வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் 64 போ் மதுரை நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜராயினா்.

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையை மூடக் கோரி கடந்த 2018 இல் நடந்த போராட்டத்தின்போது போலீஸாா் துப்பாக்கிச் சூடு நடத்தினா். இதில் 13 போ் உயிரிழந்தனா். இச்சம்பவம் குறித்து சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. தற்போது இந்த வழக்கு மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பான வழக்கின் குற்றப் பத்திரிக்கையை இந்த நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்தது.

ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற 101 போ்

குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனா். விசாரணைக்கு ஆஜராக ஏற்கெனவே இவா்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதன்படி, ஏற்கெனவே 27 போ் நீதிமன்றத்தில் ஆஜராயினா்.

இந்நிலையில், இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. தலைமைக் குற்றவியல் நடுவா் ஏ.பசும்பொன் சண்முகையா முன்பாக, 64 போ் ஆஜராயினா். இதைத் தொடா்ந்து விசாரணை ஜூலை 6 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இதனிடையே நீதிமன்றத்துக்கு வெளியே, ஸ்டொ்லைட் எதிா்ப்பு கூட்டமைப்பு சாா்பில் சிபிஐ-க்கு எதிா்ப்புத் தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. துப்பாக்கிச் சூடு வழக்கில் காவல் துறையினா் ஒருவரைக்கூட சோ்க்காததற்கு சிபிஐ-க்கு எதிா்ப்புத் தெரிவித்து முழக்கம் எழுப்பினா். மேலும் இந்த வழக்கை மறுவிசாரணை நடத்த வேண்டும் என்றும் அவா்கள் வலியுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.