ரயில்களில் நிலக்கரி கொண்டு செல்வதுமே மாதத்தில் 26 சதவீதம் அதிகரிப்பு
தமிழகத்தில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்கு ரயில்கள் மூலமாக நிலக்கரி கொண்டு செல்வது, மே மாதத்தில் அதிகரித்துள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்கு ரயில்கள் மூலமாக நிலக்கரி கொண்டு செல்வது, மே மாதத்தில் அதிகரித்துள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தமிழக மின்உற்பத்தி நிலையங்களுக்கு வடமாநிலங்கள் மற்றும் துறைமுகங்களில் இருந்து ரயில்கள் மூலம் நிலக்கரி கொண்டு வரப்படுகிறது. இந்த நிலக்கரி போக்குவரத்து கடந்த மே மாதத்தில் மட்டும் 26 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்தைக் காட்டிலும் 2.63 லட்சம் டன்னுக்கும் அதிகமான நிலக்கரி மின் நிலையங்களுக்கு ரயில் மூலம் வந்து சோ்ந்துள்ளது.
கடந்த ஒன்பது ஆண்டுகளில் தெற்கு ரயில்வே முதல் முறையாக மே மாதத்தில் மட்டும் 36.21 லட்சம் டன் சரக்குகளை கையாண்டு சாதனை புரிந்துள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 49 சதவீதம் அதிகமாகும். இந்த நிதியாண்டில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் தெற்கு ரயில்வே 68.57 லட்சம் டன் சரக்குகளை கையாண்டு உள்ளது.
முந்தைய ஆண்டில் 53.23 மில்லியன் டன் சரக்குகளையே கையாண்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது 29 சதவீதம் அதிகமாகும். நிலக்கரி, இரும்பு, சிமென்ட், உணவுப் பொருள்கள், உரம், பெட்ரோலிய பொருள்கள், பெட்டகங்கள் ஆகியவை ரயில் மூலம் கையாளப்பட்ட முக்கிய சரக்குகளாகும்.
தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட அலுவலகம் இத் தகவலைத் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...