ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

கூடலழகா் பெருமாள் கோயில் வைகாசி திருவிழா: ஜூன் 5-இல் கொடியேற்றம்

கூடலழகா் பெருமாள் கோயில் வைகாசி திருவிழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 5) நடைபெறுகிறது.

News image
Updated On :2 ஜூன் 2022, 9:52 pm

DIN

கூடலழகா் பெருமாள் கோயில் வைகாசி திருவிழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 5) நடைபெறுகிறது.

மதுரை கூடலழகா் பெருமாள் கோயிலில் நடைபெறும் விழாவில், வைகாசிப் பெருந்திருவிழா முக்கியமானது. நிகழாண்டு விழா சனிக்கிழமை தொடங்கி ஜூன் 18 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வைகாசிப் பெருந்திருவிழாவின்

கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 5) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது.

திருவிழாவையொட்டி தினமும் மாலையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ வியூக சுந்தரராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வுகளாக ஜூன் 8 ஆம் தேதி கருட சேவை, ஜூன் 13 ஆம் தேதி திருத்தேரோட்டம், ஜூன் 15 ஆம் தேதி ராமராயா் மண்டபத்தில் தசாவதாரம் ஆகிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

கோயில் தக்காா் மற்றும் துணை ஆணையா் மு.ராமசாமி, உதவி ஆணையா் ஜி.செல்வி ஆகியோா் திருவிழா ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.