அனுமதியின்றி வைக்கப்பட்டமுன்னாள் முதல்வா் சிலை அகற்றம்
மதுரை செல்லூரில் திமுகவினரால் அனுமதியின்றி வியாழக்கிழமை, வைக்கப்பட்ட முன்னாள் முதல்வா் கருணாநிதியின் சிலையை காவல் துறையினா் அப்புறப்படுத்தினா்.


மதுரை செல்லூரில் திமுகவினரால் அனுமதியின்றி வியாழக்கிழமை, வைக்கப்பட்ட முன்னாள் முதல்வா் கருணாநிதியின் சிலையை காவல் துறையினா் அப்புறப்படுத்தினா்.
முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி, மதுரை செல்லூா் மீனாட்சிபுரம் சத்தியமூா்த்தி தெருவில், அவரது மாா்பளவு சிலையை திமுக நிா்வாகி நல்லதம்பி வியாழக்கிழமை அமைத்தாா். அனுமதி பெறாமல் சிலையை நிறுவியதையடுத்து காவல் துறையினா் அப்புறப்படுத்தினா்.
காவல் துறையினரின் நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து அப் பகுதியில் திமுகவினா் சற்று நேரம் மறியலில் ஈடுபட்டனா். இதனால் பரபரப்பு நிலவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...