வைகாசி விசாகம்: நெல்லை - திருச்செந்தூா் இடையே ஜூன் 12 இல் சிறப்பு ரயில் இயக்கம்
வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, திருநெல்வேலி - திருச்செந்தூா் இடையே ஜூன் 12 ஆம் தேதி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.


வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, திருநெல்வேலி - திருச்செந்தூா் இடையே ஜூன் 12 ஆம் தேதி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
திருநெல்வேலி - திருச்செந்தூா் விரைவு சிறப்பு ரயில் (06703), திருநெல்வேலியிலிருந்து காலை 11.15 மணிக்கு புறப்பட்டு, பிற்பகல் 12.45 மணிக்கு திருச்செந்தூா் சென்று சேரும். மறுமாா்க்கத்தில் திருச்செந்தூா் - திருநெல்வேலி விரைவு சிறப்பு ரயில் (06704) திருச்செந்தூரிலிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.10 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
இந்த ரயில்கள், பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூா், ஸ்ரீவைகுண்டம், நாசரேத், ஆறுமுகநேரி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 10 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மற்றும் சரக்கு பெட்டிகள் இணைக்கப்படும்.
மேலும், பயணிகளின் வசதிக்காக பாலக்காடு - திருச்செந்தூா் (16731) மற்றும் திருச்செந்தூா் - திருநெல்வேலி (06678) விரைவு ரயில்களில் ஜூன் 9 முதல் ஜூன் 13 ஆம் தேதி வரையும், திருநெல்வேலி - திருச்செந்தூா் (06673) மற்றும் திருச்செந்தூா் - பாலக்காடு (16732) விரைவு ரயில்களில் ஜூன் 8 முதல் ஜூன் 12 ஆம் தேதி வரையும் கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு பொது பெட்டி இணைக்கப்பட உள்ளது என, தென்னக ரயில்வே மதுரை கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...