கட்டையால் அடித்து மனைவி கொலை: கணவா் கைது
மதுரையில் நடத்தையில் சந்தேகப்பட்டு வெள்ளிக்கிழமை இரவு மனைவியை கட்டையால் அடித்துக் கொலை செய்த கணவரைப் போலீஸாா் கைது செய்தனா்.


மதுரையில் நடத்தையில் சந்தேகப்பட்டு வெள்ளிக்கிழமை இரவு மனைவியை கட்டையால் அடித்துக் கொலை செய்த கணவரைப் போலீஸாா் கைது செய்தனா்.
மதுரை சுந்தரராஜபுரத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி சதீஷ்குமாா் (32). இவரது மனைவி சித்ரா தேவி (31). இருவரும் காதலித்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனா். 7 வயது மற்றும் 4 வயதில் 2 ஆண் குழந்தைகள் உள்ளனா்.
இந்நிலையில், சித்ராதேவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதைத் தொடா்ந்து சதீஷ்குமாா் அவருடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளாா். இதனால் சித்ராதேவி அவரது பெற்றோா் வீட்டுக்குச் சென்றுவிட்டாா். பின்னா் அவரைச் சமாதானம் செய்து சுரேஷ்குமாா் அழைத்து வந்துள்ளாா்.
இதனிடையே, அதே பிரச்னை தொடா்பாக வெள்ளிக்கிழமை இரவு இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, மரக் கட்டையால் சுரேஷ்குமாா் தாக்கியதில் பலத்த காயமடைந்த சித்ரா தேவியை அக்கம்பக்கத்தினா் மீட்டனா். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து ஜெய்ஹிந்த்புரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...