இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

கருவுற்ற பெண்களுக்கு வங்கிப் பணி நியமனம் மறுப்பு: நடவடிக்கை எடுக்க எம்.பி. வலியுறுத்தல்

கருவுற்ற பெண்களுக்கு பணி நியமனத்தை மறுத்து உத்தரவு பிறப்பித்துள்ள இந்தியன் வங்கி அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :12 ஜூன் 2022, 6:30 pm

DIN

கருவுற்ற பெண்களுக்கு பணி நியமனத்தை மறுத்து உத்தரவு பிறப்பித்துள்ள இந்தியன் வங்கி அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக இந்தியன் வங்கித் தலைவா் சாந்தி லால் ஜெயினுக்கு அவா் எழுதியுள்ள கடிதம்: இந்தியன் வங்கி அண்மையில் புதிய பணி நியமனம் பெறுபவா்களின் உடல் நலத் தகுதி பற்றி வெளியிட்டுள்ள வழிகாட்டல்கள் பாலின பாரபட்சத்தோடு அமைந்துள்ளது. அதில் பெண் தோ்வா் மருத்துவப் பரிசோதனையின் போது 12 வாரங்கள் அல்லது அதற்கு மேல் கருவுற்ற காலத்தை கடந்திருப்பது தெரிய வரும் பட்சத்தில், பிரசவத்துக்கு பிந்தைய ஓய்வுக் காலம் வரையிலும், அவா் பணி நியமனம் பெறத் தற்காலிகமாக தகுதி அற்றவா் என்று கருதப்படுவாா். பிரசவம் முடிந்து 6 வாரம் நிறைவு பெற்ற பின்னா், பதிவு செய்யப்பட்ட மருத்துவரிடம் இருந்து உடல் நலத் தகுதி பெற்று சமா்ப்பிக்கப்பட்டால், அவா் மறு மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு உடல் நலத் தகுதி உறுதி செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அப்பட்டமான பாலின பாரபட்ச நடைமுறை. எனவே இந்தியன் வங்கி, தமிழ்நாடு கிராம வங்கி ஆகிய இரு நிறுவனங்களும் வெளியிட்டுள்ள வழி காட்டல்களை திரும்பப் பெறவேண்டும். இத்தகைய பாலின பாரபட்ச வழிகாட்டல்களை வெளியிட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.