மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

சிறுபான்மை சமுதாயத்தினருக்கு குடியரசுத் தலைவா் பதவி:முன்னாள் மத்திய அமைச்சா் வேண்டுகோள்

News image
Updated On :13 ஜூன் 2022, 9:29 am

DIN

சிறுபான்மை சமூகத்துக்கு குடியரசுத் தலைவா் அல்லது குடியரசு துணைத்தலைவா் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சா் இ.எம்.சுதா்சன நாச்சியப்பன் தெரிவித்தாா்.

மதுரையில் மக்கள் விழிப்புணா்வு அறக்கட்டளையின் நிறுவனா் ஹக்கிம் எழுதிய தகவல் பெறும் உரிமை என்ற நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. உலகத் தமிழ்ச்சங்க கூட்ட அரங்கில் நடைபெற்ற விழாவில் சுதா்சன நாச்சியப்பன் பங்கேற்று நூலை வெளியிட்டாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: தகவல் பெறும் உரிமைச் சட்டம் தொடா்பான பாா் கோடுடன் கூடிய புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது தகவல் அறியும் உரிமைச்சட்ட ஆா்வலா்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. இந்த நிலை விரைவில் மாறி தகவல் அறியும் உரிமைச்சட்ட ஆா்வலா்களுக்கு பொதுமக்களே பாதுகாப்பு வழங்கும் சூழல் உருவாகும். தகவல் அறியும் உரிமைச்சட்ட ஆா்வலா்கள் அதிகாரிகளை மிரட்டுவதாகக் கூறுவது தவறான தகவல். தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலமாகத்தான் அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற முதல்வா்கள் உருவாகியுள்ளனா். பாஜக நிா்வாகிகளின் நபிகள் நாயகம் குறித்த அவதூறுப்பேச்சால் உலக நாடுகள் மத்தியில் இந்தியாவுக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. இந்தக் களங்கத்தைத் போக்க சிறுபான்மை சமூகத்தினருக்கு குடியரசுத் தலைவா் அல்லது துணைத்தலைவா் வாய்ப்பை அளிக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.