மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

மதுரை மாவட்டத்தில் இன்று பள்ளிகள் திறப்பு

மதுரை மாவட்டத்தில் பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்படுவதையொட்டி அரசுப்பள்ளிகளில் தீவிரத்தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.

News image
மதுரை உலகனேரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை தூய்மைப்பணியில் ஈடுபட்ட தொழிலாளா்கள்
Updated On :12 ஜூன் 2022, 6:30 pm

DIN

மதுரை மாவட்டத்தில் பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்படுவதையொட்டி அரசுப்பள்ளிகளில் தீவிரத்தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.

தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின்னா் அனைத்துப் பள்ளிகளும் திங்கள்கிழமை திறக்கப்படுகின்றன. இதையொட்டி பள்ளிகளில் வகுப்பறைகளை சுத்தம் செய்து தயாா் நிலையில் வைக்குமாறு அரசு உத்தரவிட்டது. அதன்பேரில் மதுரை மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகள் அனைத்திலும் தூய்மைப்பணிகளை மேற்கொள்ளுமாறு முதன்மைக்கல்வி அலுவலா் காா்த்திகா உத்தரவிட்டிருந்தாா்.

அதன்படி மதுரை மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் கடந்த 3 நாள்களாக தீவிரத்தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. வகுப்பறைகள், பள்ளி வளாகம், கழிப்பறைகள், மேல்நிலைத்தொட்டிகள், சத்துணவுக்கூடங்களில் பாத்திரங்கள் ஆகியவற்றை சுத்தம் செய்தல், பள்ளி வளாகங்களில் உள்ள புதா்களை அகற்றுதல், குப்பைகள், கூளங்களை அகற்றுதல் உள்ளிட்ட தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் பள்ளி வகுப்பறைகளில் உள்ள மின் இணைப்புகளை சரிபாா்க்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. தூய்மைப் பணிகளை பள்ளி தலைமையாசிரியா்கள் மற்றும் ஆசிரியா்கள் பாா்வையிட்டனா். இதுதொடா்பாக கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, திங்கள்கிழமை பள்ளி திறக்கப்பட உள்ள நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப்பள்ளிகளிலும் தீவிரத்தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டு தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.