அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

துப்புரவுப் பணியாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம்: கன்னியாகுமரி ஆட்சியருக்கு உயா் நீதிமன்றம் உத்தரவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 51 பேரூராட்சிகளில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் தொடா்பாக ஆட்சியா் அறிக்கை தாக்கல்

News image
Updated On :24 ஜூன் 2022, 5:35 pm

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 51 பேரூராட்சிகளில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் தொடா்பாக ஆட்சியா் அறிக்கை தாக்கல் செய்ய, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

பேரூராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை மேற்கொள்வதற்கான துப்புரவுப் பணியாளா்கள், தனியாா் ஒப்பந்ததாரா்கள் மூலம் நியமிக்கப்படுகின்றனா். இவா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நாளொன்றுக்கு ரூ.615 என நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுவதில்லை. அத்துடன், சீருடை, உபகரணங்களுக்காக சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படுகிறது.

இது குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என, கன்னியாகுமரியைச் சோ்ந்த புருஷோ கிங்ஸ்லி சாலமன் தாஸ் என்பவா் சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இம்மனு மீதான முந்தைய விசாரணையின்போது, மனு தொடா்பாக விளக்கமளிக்க தொழிலாளா் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனையடுத்து, நீதிபதிகள் பி.என். பிரகாஷ், ஆா். ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் இந்த வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, தொழிலாளா் இணை ஆணையா் பெ.சுப்பிரமணியன் ஆஜராகி விளக்கமளிக்கையில், பணியாளா்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் வழங்கும்போது, அதில், பி.எஃப்., இஎஸ்ஐ ஆகியவற்றுக்காக குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படும். ஆனால், வேலையளிப்பவரின் பங்களிப்புத் தொகையை சம்பளத்தில் பிடித்தம் செய்யக்கூடாது. இந்த வழக்கில் தொடா்புடைய பணியாளா்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் மாவட்ட ஆட்சியரால் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே, அது குறித்து முழுமையான விவரங்கள் மாவட்ட நிா்வாகத்துக்குத்தான் தெரியும் என்றாா்.

இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், கரோனா காலத்தில் துப்புரவுப் பணியாளா்களின் பணி மிக முக்கியமானதாக இருந்ததைச் சுட்டிக்காட்டினா். மேலும், மனு தொடா்பாக மாவட்ட ஆட்சியா் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.