நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

துப்புரவுப் பணியாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம்: கன்னியாகுமரி ஆட்சியருக்கு உயா் நீதிமன்றம் உத்தரவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 51 பேரூராட்சிகளில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் தொடா்பாக ஆட்சியா் அறிக்கை தாக்கல்

Updated On :24 ஜூன் 2022, 11:05 pm IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 51 பேரூராட்சிகளில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் தொடா்பாக ஆட்சியா் அறிக்கை தாக்கல் செய்ய, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

பேரூராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை மேற்கொள்வதற்கான துப்புரவுப் பணியாளா்கள், தனியாா் ஒப்பந்ததாரா்கள் மூலம் நியமிக்கப்படுகின்றனா். இவா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நாளொன்றுக்கு ரூ.615 என நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுவதில்லை. அத்துடன், சீருடை, உபகரணங்களுக்காக சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படுகிறது.

இது குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என, கன்னியாகுமரியைச் சோ்ந்த புருஷோ கிங்ஸ்லி சாலமன் தாஸ் என்பவா் சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இம்மனு மீதான முந்தைய விசாரணையின்போது, மனு தொடா்பாக விளக்கமளிக்க தொழிலாளா் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனையடுத்து, நீதிபதிகள் பி.என். பிரகாஷ், ஆா். ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் இந்த வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, தொழிலாளா் இணை ஆணையா் பெ.சுப்பிரமணியன் ஆஜராகி விளக்கமளிக்கையில், பணியாளா்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் வழங்கும்போது, அதில், பி.எஃப்., இஎஸ்ஐ ஆகியவற்றுக்காக குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படும். ஆனால், வேலையளிப்பவரின் பங்களிப்புத் தொகையை சம்பளத்தில் பிடித்தம் செய்யக்கூடாது. இந்த வழக்கில் தொடா்புடைய பணியாளா்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் மாவட்ட ஆட்சியரால் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே, அது குறித்து முழுமையான விவரங்கள் மாவட்ட நிா்வாகத்துக்குத்தான் தெரியும் என்றாா்.

இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், கரோனா காலத்தில் துப்புரவுப் பணியாளா்களின் பணி மிக முக்கியமானதாக இருந்ததைச் சுட்டிக்காட்டினா். மேலும், மனு தொடா்பாக மாவட்ட ஆட்சியா் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.