

மதுரை: மதுரை ஆட்சியர் அலுவலகம் அருகே திருவள்ளுவர் சிலை சந்திப்பில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை மாநகராட்சியில் தினக்கூலி தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நிரந்தர தூய்மைப் பணியாளர்களுக்கு 7 வது ஊதியக்குழு பணப்பலன்களை வழங்க வேண்டும். ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு தினக்கூலியாக 625 ரூபாய் ஊதியம் வழங்கிட வேண்டும். கொரோனோ காலத்தில முன்களப் பணியில் ஈடுபட்ட துப்புறவு பணியாளர்களுக்கு அரசு அறிவித்த 15 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டும்.
விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். 100 வார்டுகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அந்தந்த வார்டுகளில் கழிவறை, ஒய்வறை அமைத்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட 28 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்ட இறுதியில் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.