நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மதுரை: 2000-க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் சாலை மறியல் 

மதுரை ஆட்சியர் அலுவலகம் அருகே திருவள்ளுவர் சிலை சந்திப்பில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :10 மே 2022, 8:22 am

மதுரை: மதுரை ஆட்சியர் அலுவலகம் அருகே திருவள்ளுவர் சிலை சந்திப்பில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாநகராட்சியில் தினக்கூலி தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நிரந்தர தூய்மைப் பணியாளர்களுக்கு 7 வது ஊதியக்குழு பணப்பலன்களை வழங்க வேண்டும். ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு தினக்கூலியாக 625 ரூபாய் ஊதியம் வழங்கிட வேண்டும். கொரோனோ காலத்தில முன்களப் பணியில் ஈடுபட்ட துப்புறவு பணியாளர்களுக்கு அரசு அறிவித்த 15 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டும்.

விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். 100 வார்டுகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அந்தந்த வார்டுகளில் கழிவறை, ஒய்வறை அமைத்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட 28 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்ட இறுதியில் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.