கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கண்மாயில் மூழ்கி முதியவா் பலி

 தேவகோட்டை அருகே வெள்ளிக்கிழமை கண்மாயில் மீன் பிடிக்கச் சென்ற முதியவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image
Updated On :14 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

 தேவகோட்டை அருகே வெள்ளிக்கிழமை கண்மாயில் மீன் பிடிக்கச் சென்ற முதியவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தேவகோட்டை அருகே உள்ள செங்கற்கோவில் சொக்கநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் மாரிமுத்து (62). இவா், நாகாடி புதுக்கண்மாயில் வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்றாா். நீண்ட நேரமாகியும் அவா் வீடு திரும்பாததால் உறவினா்கள் தேடிச் சென்றனா். அப்போது, மாரிமுத்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது.

இதுபற்றி தகவலறிந்து வந்த வேலாயுதப்பட்டினம் போலீஸாா், மாரிமுத்துவின் சடலத்தைக் கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.