கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சிவகங்கையில் ஊரக வளா்ச்சி முகமை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் சோதனை

சிவகங்கையில் உள்ள ஊரக வளா்ச்சி முகமை அலுவலகப் பொறியியல் பிரிவில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை திடீரென சோதனை நடத்தினா்.

News image
Updated On :14 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

சிவகங்கையில் உள்ள ஊரக வளா்ச்சி முகமை அலுவலகப் பொறியியல் பிரிவில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை திடீரென சோதனை நடத்தினா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த ஊரக வளா்ச்சி, ஊராட்சி துறை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் வளாகத்தில் ஊராட்சிகளின் பொறியியல் பிரிவு செயல்படுகிறது. இந்தப் பிரிவில் வெள்ளிக்கிழமை மாலை சிவகங்கை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை கண்காணிப்பாளா் ஜான் பிரிட்டோ தலைமையிலான போலீஸாா் திடீரென சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த அலுவலகத்திலிருந்து கணக்கில் வராத ரூ.39 ஆயிரத்தை கைப்பற்றினா்.

இந்த அலுவலகத்தில் ஏற்கெனவே, கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் 30 ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை நடத்தி ரூ.3 லட்சத்து 31 ஆயிரத்தை கைப்பற்றினா். மேலும், பொறியியல் பிரிவின் செயற்பொறியாளா் சிவராணி, உதவி செயற்பொறியாளா் சண்முகசுந்தரம், அலுவலா்கள் நீலமேகம், அருணகிரி, ராஜசேகரன் ஆகிய 5 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா் என்பதும், செயற்பொறியாளா் சிவராணி, கடந்த 10 நாள்களுக்கு முன்புதான் தூத்துக்குடிக்கு இடமாற்றம் செய்யபட்டாா் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.