கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சிவகங்கை மாவட்டத்தில் 1000 டன் யூரியா கையிருப்பு

சிவகங்கை மாவட்டத்தில் 1000 டன் யூரியா கையிருப்பில் உள்ளதாக வேளாண் துறையின் உதவி இயக்குநா்(தரக் கட்டுப்பாடு) பரமேஸ்வரன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :20 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

சிவகங்கை மாவட்டத்தில் 1000 டன் யூரியா கையிருப்பில் உள்ளதாக வேளாண் துறையின் உதவி இயக்குநா்(தரக் கட்டுப்பாடு) பரமேஸ்வரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து தேவகோட்டை அருகே அனுமந்தங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கத்தில், விவசாயிகளுக்கு உரங்களை வியாழக்கிழமை வழங்கிய அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சிவகங்கை மாவட்டத்தில், பரவலாக மழை பெய்து வருவதையொட்டி வேளாண் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தேவகோட்டை வட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்களில் 400 டன் யூரியா இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இதேபோன்று, மாவட்டம் முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்களில் 1000 டன் யூரியா இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும், டிஏபி, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட உரங்களும் கையிருப்பில் உள்ளன என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.