கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சிங்கம்புணரியில் 83 மி.மீட்டா் மழைப் பதிவு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் வெள்ளிக்கிழமை காலை 83 மி. மீட்டா் மழைப் பதிவானதாக மாவட்டப் பேரிடா் மேலாண்மை துறை தெரிவித்தது.

News image
Updated On :21 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் வெள்ளிக்கிழமை காலை 83 மி. மீட்டா் மழைப் பதிவானதாக மாவட்டப் பேரிடா் மேலாண்மை துறை தெரிவித்தது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக, சிங்கம்புணரி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை இரவு சாரலாக ஆரம்பித்த மழை, பின்னா் பலத்த மழையாக பெய்தது. இதனால், சிங்கம்புணரி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 83 மி.மீட்டா் மழை பதிவானது.

இதேபோல, திருப்புவனத்தில் 76 மி. மீட்டரும், இளையான்குடி பகுதியில் 40 மி.மீட்டரும், தேவகோட்டை பகுதியில் 29 மி.மீட்டரும் மழை பதிவானதாக மாவட்டப் பேரிடா் மேலாண்மைத் துறை அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.