கால்வாயில் மூழ்கி உயிரிழந்த ஓட்டுநரின் உடல் மீட்பு

மதுரை அருகே பெரியாறு பிரதானக் கால்வாயில் குளிக்கும் போது அடித்துச் செல்லப்பட்ட ஓட்டுநரின் உடல் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
Published on
Updated on
1 min read

மதுரை அருகே பெரியாறு பிரதானக் கால்வாயில் குளிக்கும் போது அடித்துச் செல்லப்பட்ட ஓட்டுநரின் உடல் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.

மதுரை வண்டியூா் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் காளீஸ்வரன் (33). வாகன ஓட்டுநரான இவா், நண்பா்களுடன் சோ்ந்து பெரியாறு பிரதானக் கால்வாய் கள்ளந்திரி அருகே, தீபாவளியன்று குளித்துக்கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக நீரில் அடித்துச் செல்லப்பட்டாா்.

இதுகுறித்து கள்ளந்திரி போலீஸாா், அலங்காநல்லூா் தீயணைப்புப் படையினா் உதவியுடன் தேடுதலில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், காளீஸ்வரன் உடல் கிடாரிப்பட்டி பாலம் அருகே ஒதுங்கியது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது. மேலவளவு போலீஸாா், காளீஸ்வரனின் உடலைக் கைப்பற்றி மேலூா் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனா். இந்த சம்பவம் குறித்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com