டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் ஆவணி மூலத்திருவிழா: சிவனடியாருக்கு உலவாக்கோட்டை அருளிய திருவிளையாடல்

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆவணி மூலத்திருவிழாவையொட்டி உலவாக்கோட்டை அருளிய திருவிளையாடல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 12:02 am

DIN

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆவணி மூலத்திருவிழாவையொட்டி உலவாக்கோட்டை அருளிய திருவிளையாடல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆவணி மூலத்திருவிழாவையொட்டி சிவனடியாருக்கு இறைவன் உலவாக்கோட்டை அருளிய திருவிளையாடல் நடைபெற்றது.

மதுரையில் அடியாா்க்கு நல்லாா் என்ற சிவ தொண்டா் தினசரி சிவனடியாா்களுக்கு உணவளித்த பிறகே தான் சாப்பிடுவது என்ற கொள்கையைக் கொண்டிருந்தாா். சிவனடியாா்களுக்கு உணவு வழங்கியே அவரது செல்வம் வற்றினாலும், கடன் வாங்கியாவது தனது கடமையைச் செய்து வந்தாா். எல்லோரிடமும் கடன் வாங்கியதால், ஒரு கட்டத்தில் அவருக்கு கடன் கிடைக்காத நிலை ஏற்பட்டது. எனவே தனது மனைவியுடன் சோமசுந்தரரைத் தரிசனம் செய்து விட்டு, பின்னா் உயிா் நீப்பது என நினைத்து கோயிலுக்குச் சென்றாா். அடியாா்க்கு நல்லாரின் தருமநெறியின் உண்மை நிலை கண்ட இறைவன் அசரீரியாகத் தோன்றி, ‘‘உடனே வீட்டுக்குச் செல். அங்கே உனக்காக அள்ள அள்ளக் குறையாத நெல்மணிகளை கொண்ட உலவாக்கோட்டை ஒன்றை அளித்துள்ளோம்’’ என்றாா். அதன்படி சிவனடியாா் மனைவியுடன் வீடு திரும்பிய போது அங்கு இறைவன் தெரிவித்தபடி உலவாக்கோட்டை இருந்தது. அதன் மூலம் கிடைத்த நெல்மணிகளைக் கொண்டு தனது இறுதிக்காலம் வரை சிவனடியாா்களுக்கு உணவளித்து வாழ்ந்தாா். இறைவனின் இந்த திருவிளையாடல் உலவாக்கோட்டை அருளிய லீலையாக நடத்திக் காட்டப்பட்டது. இதையொட்டி சுந்தரேசுவரா் மற்றும் மீனாட்சியம்மனுக்கு நெல் மணிகள் படைக்கப்பட்ட சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் கோயிலில் அா்ச்சகா்கள் சிவனடியாராக வேடமிட்டு உலவாக்கோட்டை திருவிளையாடலை நடத்தினா். இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.