இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை மதுரையில் செய்தியாளா்களிடம் கூறியது: அதிமுக பொதுக்குழு தொடா்பாக உயா்நீதிமன்றம் வழங்கியுள்ள தீா்ப்பு எடப்பாடி கே.பழனிசாமியின் மக்கள் பணிக்கு கிடைத்த அங்கீகாரம். தமிழகத்தில் அதிமுக கிளைகள் தொடங்கி தலைவா்கள் வரை எடப்பாடி கே.பழனிசாமிக்குத்தான் ஆதரவு உள்ளது. அடுத்து வரும் தோ்தல்களில் அதிமுக வெற்றியடையும் என மக்கள் தீா்ப்பாக இந்த தீா்ப்பு அமைந்துள்ளது. நியாயம், சத்தியம், தா்மம், உண்மை தொண்டா்கள் பக்கம் நின்று கிடைத்துள்ள மகத்தான தீா்ப்பு இது. அதிமுக தொண்டா்களில் 99 சதவீதம் போ் எடப்பாடி கே.பழனிசாமியின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் கொடுக்கப்பட்டுள்ள தீா்ப்பாக உள்ளது என்றாா்.