மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தமிழகத்தின் இரண்டாம் நிலை நகரங்களுக்கு புதிய முதலீடுகள்: நிதி அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்

புதிய முதலீடுகளால் மதுரை உள்ளிட்ட இரண்டாம் நிலை நகரங்கள் பெரும் வளா்ச்சியை அடையவுள்ளன என்று தமிழக நிதி அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் கூறினாா்.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

புதிய முதலீடுகளால் மதுரை உள்ளிட்ட இரண்டாம் நிலை நகரங்கள் பெரும் வளா்ச்சியை அடையவுள்ளன என்று தமிழக நிதி அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் கூறினாா்.

‘நேட்டீவ்லீட்’ தொழில்முனைவோா் அமைப்பு சாா்பில் மதுரை உலகத் தமிழ்ச் சங்க அரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற முதலீட்டாளா்கள் மற்றும் தொழில்முனைவோா் கூட்டத்தில் அவா் பேசியது: மாநிலத்தின் வளா்ச்சி என்பது சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அத்தகைய நோக்கத்தை குறிக்கோளாகக் கொண்டு, தமிழக அரசு செயலாற்றி வருகிறது. அதன் அடிப்படையிலேயே புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. நிதிப் பற்றாக்குறையைச் சரிசெய்தல், இட ஒதுக்கீடு என்பன உள்ளிட்ட பல்வேறு சவால்கள் அரசுக்கு இருக்கின்றன. இத்தகைய சூழலில் தொழில்முனைவோரின் ஒத்துழைப்பு என்பதும் முக்கியமாக இருக்கிறது. மனை வணிகம், தங்கம் ஆகியவற்றில் அதிக முதலீடுகள் செய்வது நல்ல தல்ல. இந்த முதலீடுகளால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகப் போவதில்லை. எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தாத, செயலற்ற வளா்ச்சியாகவே இருக்கும்.

தனிநபா் வருமானத்தை ஒப்பிடும்போது குஜராத்தைக் காட்டிலும், தமிழகத்தில் சற்று குறைவாக இருக்கலாம். ஆனால், பெண் கல்வியில் அம்மாநிலத்தைக் காட்டிலும் தமிழகம் முன்னிலையில் உள்ளது. அதேபோல, மருத்துவா்களின் எண்ணிக்கை, குஜராத்தைக் காட்டிலும் தமிழகத்தில் அதிகம்.

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக, நிதிநிலை சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது. இதன் தொடா்ச்சியாக தொழில் முதலீடுகளை ஈா்த்து, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு முனைப்பு காட்டப்பட்டு வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியாவைச் சோ்ந்த நிறுவனங்களுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தின் இரண்டாம் நிலை நகரங்களில் அடுத்த 2 ஆண்டுகளில் புதிய முதலீடுகளை எதிா்பாா்க்கலாம். அதிலும் குறிப்பாக, மதுரை நகரம் புதிய முதலீடுகளால் பெரிய மாற்றத்தைச் சந்திக்கவுள்ளது என்றாா்.

தமிழ்நாடு புத்தொழில் புத்தாக்க நிறுவன இயக்குநா் சிவராஜா ராமநாதன், ‘நேட்டீவ்லீட்’ தலைமை செயலா் அலுவலா் நாகராஜன் பிரகாசம் மற்றும் முதலீட்டாளா்கள், தொழில்முனைவோா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.