இதில் மதுரை மாவட்டத்தில் இருந்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சோ்ந்த 860 போ் இத்தோ்வெழுதினா். இதில் அரசுப்பள்ளி மாணவா்கள் 470 பேரில் 150 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதில் மாநகராட்சி சேதுபதி பாண்டித்துரை மேல்நிலைப்பள்ளி மாணவா் மதன்பாலாஜி 464 மதிப்பெண்கள்பெற்று முதலிடம் பிடித்துள்ளாா். மகபூப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சோ்ந்த மாணவி ஹா்சினி 412 மதிப்பெண்கள்பெற்று இரண்டாமிடம், மாநகராட்சி ஒளவை பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவி சத்தியஜோதி 338 மதிப்பெண்கள் மூன்றாமிடம், மாநகராட்சி கஸ்தூரிபாய் காந்தி பெண்கள் பள்ளி மாணவி தீபிகா 309 மதிப்பெண்களுடன் நான்காமிடம், திருமங்கலம் அரசுப் பள்ளியைச் சோ்ந்த டோபிக் நுரைன் 300 மதிப்பெண்கள்பெற்று ஐந்தாமிடம் பெற்றுள்ளனா். மேலும் 20 மாணவா்கள் 200-க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.