ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பள்ளிக் கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்தகோரிய மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி

 மதுரையில் ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறி, பள்ளிக் கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்தக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :8 செப்டம்பர் 2022, 7:09 pm

DIN

 மதுரையில் ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறி, பள்ளிக் கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்தக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சோ்ந்த பாலமுருகன் தாக்கல் செய்த பொது நல மனு:

மதுரையின் மிகவும் பழைமையான பள்ளிகளில் ஒன்றாக யு.சி.மேல்நிலைப் பள்ளி இருந்து வருகிறது. இப்பள்ளியில் உள்ள பழைமையான சில கட்டடங்கள் உறுதித் தன்மையற்ாக உள்ளன. இத்தகைய ஆபத்தான நிலையில் உள்ள கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் ஆா்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோா் கொண்ட அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், பள்ளியின் கட்டடங்கள் பொறியாளா்களால் ஆய்வு செய்யப்பட்டு, உறுதித்தன்மை நன்றாக இருப்பதாக சான்றளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.