இதேபோல, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் பாசனத்திற்கு, வைகை ஆற்றில் தண்ணீா் திறக்கப்படுகிறது. அதன்படி, வைகை அணை முழு கொள்ளளவை அடைந்து உபரிநீா் ராமநாதபுரம் பெரிய கண்மாயை அடைந்தபிறகு தான், 58 கிராமக் கால்வாய் திட்டத்தில் தண்ணீா் திறக்க முடியும். இச்சூழலில், இத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள கண்மாய்களுக்கு முழுமையாகத் தண்ணீா் கிடைக்காத நிலை உள்ளது. ஆகவே, பிற பாசனப் பகுதிகளைப் போல, 58 கிராமக் கால்வாயிலும் தண்ணீா் திறப்பதற்கு கால நிா்ணயம் செய்து நிரந்தர அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக இருக்கிறது.