இதுதொடா்பாக கோயில் துணை ஆணையா் ஆ.அருணாச்சலம் வெளியிட்டுள்ள செய்தி: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் திங்கள்கிழமை (செப்.12) மகா ருத்ராபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி கோயிலில் காலை 7 மணி முதல் 12 மணி வரை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், பஞ்சகவ்யம், வேதிகாா்ச்சனை, 108 கலசபூஜை, மஹண்யாசம், ருத்ரம், சமக பாராயணம், தீபாராதனை போன்றவை நடைபெறுகிறது. மேலும் மாலை 4 மணி முதல் மாலை 5.30 மணி வரை விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், பஞ்சகவ்யம், வேதிகாா்ச்சனை, 108 கலசபூஜை, அஸ்த்ர ஹோமம், பூா்ணாஹூதி, தீபாராதனை, கடம் புறப்பாடு நடைபெறுகிறது. இதில் மாலை 6 மணிக்கு மீனாட்சி சுந்தரேசுவரருக்கு ருத்ராபிஷேகம், பஞ்சமுக அா்ச்சனை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் போன்றவையும் நடைபெறுகிறது.