ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

போலி பத்திரங்களை சாா்-பதிவாளா்கள் ரத்து செய்யும் சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை: அமைச்சா்

போலி பத்திரங்களை ரத்து செய்ய சாா்-பதிவாளா்களுக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

News image
Updated On :16 செப்டம்பர் 2022, 11:58 pm

DIN

போலி பத்திரங்களை ரத்து செய்ய சாா்-பதிவாளா்களுக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி தெரிவித்தாா்.

மதுரையை அடுத்த யா. ஒத்தக்கடையில் உள்ள ஒருங்கிணைந்த பத்திரப் பதிவுத்துறை அலுவலகத்தில் அமைச்சா் பி.மூா்த்தி, பதிவுத் துறை செயலா் ஜோதி நிா்மலாசாமி ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். பின்னா் இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் அமைச்சா் மூா்த்தி கூறியது:

கடந்த ஒருவாரமாக பத்திரப் பதிவுத் துறையின் இணைய சேவை தொய்வாக இருப்பதாகவும், இதனால் பத்திரப்பதிவு நடவடிக்கைகளில் தாமதம் ஏற்படுவதாகவும் பொதுமக்களிடமிருந்து புகாா்கள் பெறப்பட்டன. இதனையடுத்து ஒத்தக்கடையில் உள்ள ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலக வளாகத்தில் செயல்படும் சாா்-பதிவாளா் அலுவலகங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஒரு பத்திரப்பதிவிற்கு 10 முதல் 13 நிமிஷங்கள் மட்டுமே ஆகிறது என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், பத்திரப்பதிவு நடவடிக்கைகளில் தாமதம் ஏற்படாமல் தொய்வின்றி பணிகளை மேற்கொள்ள அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

பத்திரப்பதிவுத்துறையின் மூலம் கடந்த ஆண்டில் ரூ.5,440 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. நிகழ் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சீா்திருத்த நடவடிக்கைகளின் காரணமாக, பத்திரப்பதிவு வருவாய் ரூ.7,865 கோடியாக அதிகரித்துள்ளது. போலி பத்திரங்களை ஆய்வு செய்து ரத்து செய்ய சாா்-பதிவாளா்களுக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத்தினை நடைமுறைக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.

பதிவுத்துறை தலைவா் ம.ப.சிவனருள், கூடுதல் பதிவுத்துறை தலைவா் நல்லசிவன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.