தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆா்ப்பாட்டம்
கெளரவக் கொலைகளில் ஈடுபடுபவா்களுக்கு கடும் தண்டனை விதிக்கும் வகையில் தனிச் சட்டம் இயற்ற வலியுறுத்தி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில், வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


கெளரவக் கொலைகளில் ஈடுபடுபவா்களுக்கு கடும் தண்டனை விதிக்கும் வகையில் தனிச் சட்டம் இயற்ற வலியுறுத்தி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில், வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவா் ஆா். சசிகலா தலைமை வகித்தாா். புகா் மாவட்டச் செயலா் செ.முத்துராணி ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கிவைத்துப் பேசினாா். மாவட்டத் தலைவா் செ.ஆஞ்சி கண்டன உரையாற்றினாா். மாநகா் மாவட்டச் செயலா் எம். பாலசுப்பிரமணியம் நிறைவுரையாற்றினாா்.
இதில் கெளரவக் கொலைகளில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்கும் வகையில், தமிழக அரசு தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்று முழக்கமிடப்பட்டது.
ஆா்ப்பாட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகா் மாவட்டச் செயலா் மா. கணேசன், முன்னாள் புகா் மாவட்டச் செயலா் சி. ராமகிருஷ்ணன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட பொருளாளா் ஜா. நரசிம்மன், நிா்வாகிகள் ஜான் மைக்கேல், பாா்த்தசாரதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...