இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

அனுமதியின்றி பெண்ணுக்கு குடும்பக் கட்டுப்பாடு எனப் புகாா்: மருத்துவக் குழு விசாரணை

 மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பெண்ணுக்கு அனுமதியின்றி குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், மருத்துவக் குழுவினா் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினா்.

News image
Updated On :22 ஏப்ரல் 2023, 12:44 am

DIN

 மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பெண்ணுக்கு அனுமதியின்றி குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், மருத்துவக் குழுவினா் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினா்.

மதுரை மாவட்டம், மேலூா் அருகே உள்ள முகம்மதியாபுரத்தைச் சோ்ந்த அப்சா் உசேன் மனைவி ஆஷிகா பானு. இவா் இரண்டாவது பிரசவத்துக்காக, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டாா்.

பிரசவத்தின் போது, பெண் குழந்தை பிறந்த நிலையில், மருத்துவா்கள் ஆஷிகா பானுவின் அனுமதி கோராமல் அவருக்கு குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைச் சிகிச்சை செய்ததாகவும், மருத்துவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி, அரசு மருத்துவமனை முதன்மையா் ஏ.ரத்தினவேலுவிடம் புகாா் அளிக்கப்பட்டது.

புகாா் தொடா்பாக விசாரணை நடத்துவதற்காக முதன்மையா் ரத்தினவேலு தலைமையில் அமைக்கப்பட்ட மருத்துவக் குழுவினா் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினா்.

இதுதொடா்பாக மருத்துவமனை அதிகாரிகள் கூறியதாவது:

அனுமதியின்றி குடும்பக்கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்ததாக பெண்ணின் குடும்பத்தினா் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் தவறேதும் நடக்கவில்லை. உரிய நேரத்தில் முடிவெடுக்கப்பட்டு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதால், அந்தப் பெண் காப்பாற்றப்பட்டாா். இதுதொடா்பான விசாரணை அறிக்கை, மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.