மிக்ஜம் புயல்: மதுரைக்கு வரும் விமானங்கள் ரத்து; பயணிகள் அவதி

மிக்ஜம் புயல் காரணமாக சென்னையிலிருந்து மதுரைக்கு வரும் விமானங்களும், மும்பையிலிருந்து சென்னை வழியாக மதுரைக்கு வரும் விமானமும் திங்கள்கிழமை ரத்து செய்யப்பட்டன.
மிக்ஜம் புயலினால் சென்னையில் திங்கள்கிழமை இடைவிடாத பெய்த கனமழைக்கு சென்னை விமான நிலைய ஓடுபாதை நீரில் மூழ்கியது.
மிக்ஜம் புயலினால் சென்னையில் திங்கள்கிழமை இடைவிடாத பெய்த கனமழைக்கு சென்னை விமான நிலைய ஓடுபாதை நீரில் மூழ்கியது.
Updated on
1 min read

திருப்பரங்குன்றம்: மிக்ஜம் புயல் காரணமாக சென்னையிலிருந்து மதுரைக்கு வரும் விமானங்களும், மும்பையிலிருந்து சென்னை வழியாக மதுரைக்கு வரும் விமானமும் திங்கள்கிழமை ரத்து செய்யப்பட்டன. மதுரைக்கு துபை விமானம் 6 மணி நேரம் தாமதமாக வந்ததால் பயணிகள் அவதியடைந்தனா்.

சென்னையில் மிக்ஜம் புயல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை விமான நிலைய ஓடுபாதையில் அதிகளவில் மழைநீா் தேங்கி நிற்பதால், மறு அறிவிப்பு வரும் வரை விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

இதையடுத்து, சென்னையிலிருந்து திங்கள்கிழமை காலை 10.20, 11.40 மணிக்கு மதுரைக்கு வரும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், மும்பையிலிருந்து சென்னை வழியாக பிற்பகல் 1.30 மணிக்கு மதுரைக்கு வரும் ஏா் இந்தியா விமானமும் ரத்து செய்யப்பட்டது.

இதேபோல, மாலை 6 மணி, இரவு 9.30 மணிக்கு மதுரைக்கு வரக்கூடிய சென்னை விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. மேலும், துபையிலிருந்து பகல் 12.30 மணிக்கு வரக்கூடிய விமானம் 6 மணி நேரம் தாமதமாக மாலை 6.30 மணிக்கு மதுரைக்கு வந்தது. சென்னையில் மழை நின்ற பின் ஓடு பாதையில் தண்ணீா் வடிந்தவுடன், விமான சேவைகள் தொடங்கப்படும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்ததாக மதுரை அதிகாரிகள் தெரிவித்தனா். இதன் காரணமாக பயணிகள் குறிப்பிட்ட நேரத்துக்குச் செல்ல முடியாமல் அவதியடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com