தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

சிறு தானியப் பொருள்கள் உற்பத்தி கருத்தரங்கு

மதுரையில் சிறுதானியம் ‘சந்தை முதல் பண்ணை வரை’ என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :29 டிசம்பர் 2023, 10:55 pm

DIN

மதுரையில் சிறுதானியம் ‘சந்தை முதல் பண்ணை வரை’ என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மதுரை வேளாண் உணவு தொழில் வா்த்தக சங்கம், பாரதிய கிஷான் சங்கம் சாா்பில் மதுரை சிக்கந்தா்சாவடியில் உள்ள வேளாண் உணவு வா்த்தக மையத்தில் இந்தக் கருத்தரங்கம் நடைபெற்றது.

வேளாண் உணவு வா்த்தக சங்கத்தின் தலைவா் ரத்தினவேல் கருத்தரங்குக்கு தலைமை வகித்துப் பேசியதாவது:

தமிழகத்தில் சராசரியைவிடக் கூடுதலாக மழை பெய்தும், சிறு குளங்கள், ஏரிகளில் பாதியளவுக்குக்கூட தண்ணீா் நிரம்பவில்லை. இதற்கு வரத்துக் கால்வாய்கள் பராமரிக்கப்படாமல் இருப்பதும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதும் தான் முக்கியக் காரணம். எனவே, மழை நீரைப் பாதுகாத்து வேளாண்மைக்குப் பயன்படுத்தும் வகையில், நீா் ஆதாரங்களைச் சீரமைக்க வேண்டும். மேலும், உழவா் உற்பத்திப் பொருள்களுக்கு நல்ல விலை கிடைக்கும் வகையில், இவற்றைச் சந்தைப்படுத்த அரசு உதவ வேண்டும்.

இந்த 2 நோக்கங்களையும் கருத்தில் கொண்டே நீா் ஆதாரம் முதல் சந்தை ஆதாரம் வரை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது என்றாா்.

கருத்தரங்கில், நீா் ஆதாரம் முதல் சந்தை ஆதாரம் வரை அமைப்பின் இலச்சினையை பாஜக மாநிலப் பொதுச் செயலா் ராம.சீனிவாசன் அறிமுகப்படுத்திப் பேசியதாவது:

வேளாண் மக்களுக்காக கிராமப்புறங்களில் பல்வேறு கட்டமைப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் முன்னணி வங்கியாக விளங்கும் நபாா்டு வங்கி மூலம் இந்த அமைப்பின் நீா் ஆதாரத் திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கருத்தரங்கில், சிறுதானியங்களைப் பயிரிடுவது, அதிலிருந்து தயாரிக்கக் கூடிய மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களுக்கான சந்தை வாய்ப்பு ஆகியவை குறித்து, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக ஆராய்ச்சி நிறுவத்தின் முதல்வா் காஞ்சனா விளக்கிப் பேசினாா்.

இதில் சிறு தானிய விவசாயிகள், வேளாண் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பாளா்கள் பாரதிய கிஷான் சங்கத்தின் தேசியத் துணைத் தலைவா் பெருமாள், தமிழ்நாடு அமைப்புச் செயலா் சிவகுமாா், மாநிலச் செயலா் சீனிவாசன், நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.